Read all my poems
www.thottarayaswamy.net

தேடல்

உன்னில் தொலைவதற்காகவே
என் தேடல்களை
உன்னிடமிருந்தே ஆரம்பிக்கின்றேன்
இருந்தும்
என் தொலைதலின்முடிவினில்
ஏனோ என் தோல்வியை
உணர்கின்றேன்..

100. நூறாவது கவிதை

கல்லரை முன்
கண்ணீர் சிந்தி

கண்துடைக்க
என்னை எழுப்பிவிடாதே

உன்
கருவறையில்
ஜனனிக்க வேண்டும்

நான்!

99.உள்ளங்கை

உன்
உள்ளங்கையில்
குடியேற ஆசைப்பட்டு

முற்றத்தில் சொட்டியது
அந்திமழை

98.வலி

உதிர்ந்தது பூ

வலியில் துடித்தாய்
நீ!

97பனிச்சிலை

சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!

மனசெல்லாம்
நீ!

96.கருவறை

என்
உயிர் நெய்த
கருவறையில்
உனைக்கிடத்தி

காதல் வலியெடுக்க
காத்திருந்தேன்

உன்னை பிரசுவிக்க!

95.தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி

நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி

நீ
என்ன முரண்களின்
மகளா!